Friday 10 December 2010

எனது நிலத்திற்காக பிரார்த்தியுங்கள்!

எனது நிலத்திற்காக பிரார்த்தியுங்கள்!

தீபச்செல்வன்-திகதி:07.12.2010
வீழ்ந்து துயரம் விளைந்து மூடிய நிலத்தைதுண்டாக்கிச் செல்ல வரும் கைகள் விடும் கட்டளைகளால்இன்றெமது நிலம் துடித்துக் கொண்டிருக்கிறது.


மீண்டும் ஒருமுறை பெயர்ந்து செல்லுமாறுசனங்கள் பணிக்கப்பட்ட வேளையில் குழந்தைகள் வெருண்டழுதுகைகளால் நிலத்தை தொடுகின்றனர்ஆறுகள் நிலத்தை முத்தமிட்டுச் செல்லும் மழைநாளில்ஈரமாகி செழித்த நிலம் கொதித்துக் கிடக்கிறது.


விரக்தியையும் ஏமாற்றத்தையும்தவிர என்னிடம் எதுவுமில்லைகொள்ளைக்காரர்கள் நம்பிக்கையை முறியடிக்கிறார்கள்மீண்டும் மீண்டும் நிலத்தில் எத்தனை கைகள் உதைக்கின்றன?நிலத்தை அள்ளிச் செல்லஎத்தனை விதிகளை எழுதுகின்றன?பிறந்து கிடந்த நிலத்தை கொள்ளையடிக்கஎத்தனை வடிவங்கள் அலைகின்றன?


வல்லமை அழிந்து கடவுள்களால் கைவிட்டதுயரைத் தின்று களிக்கும் காலத்தில்எனது நிலத்திற்காய் பிரார்த்திப்பாயா தோழனே!


அமைதியற்று தெருக்களில் பறிக்கப்பட்ட நிலத்தின் பறிக்கப்பட்ட நிருபங்களுக்காகஅலையும் சனங்களிடம் இல்லை துளிர்விடும் வார்த்தைகள்குந்தியிருக்கும் நிலங்களை தின்றுசனங்களை வதைக்கும் காலம் நம்மை அச்சுறுத்துகிறதுவாழ் நிலக் கனவின் வாக்குமூலங்களை நிராகரித்துநிலத்துடன் கொல்லப்படுகின்றனர் சனங்கள்.


கைவிடப்பட்ட சனங்களுக்காய்நிலத்திற்காய் அழுதலையும் குழந்தைகளுக்காய்குந்தியிருக்க ஒரு துண்டு நிலத்திற்காய்பிரார்த்தனை செய் தோழி!தாழ் நிலம் மேலுமாக தாழ்த்தப்படுகிறதுஆறுகளுடன் மருதமரங்கள் துடித்தசைகின்றன.


தவிக்கும் தாயே உனது கண்ணீரும்உன் பிள்ளைகளின் குருதியும் இந்த ஆற்றில் பெருக்கெடுத்துச் செல்கிறதுதாழ் நிலக்குழந்தைகளே நாம் எங்கு செல்வது?குருதியும் கண்ணீரும் காயாத நிலத்தைதுயர் இன்னும் ஈரமாக்குகிறது.


தெருத் தெருவாக, கிராமம் கிராமமாக நகரம் நகரமாகநிலத்தை அள்ளிச் செல்பவர்களின் அகலமான கைகள் நிலமீதலைகின்றனதயவு செய்து எனது நிலத்திற்காக தொடர்ந்து பிரார்த்தியுங்கள்!